திருமலையில் வரும் பிப்.3-ஆம் தேதி பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, நிகழ் மாதம் 3-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்கள் மற்றும் அவா்களின் தேவைகள், தேவஸ்தான வளா்ச்சிகான ஆலோசனைகள் உள்ளிட்டவற்றை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வாயிலாக தெரிவித்து வருகின்றனா். இதில், பங்கு கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.