திருப்பதி அலிபிரி பாத யாத்திரை வழியில் அன்னமாச்சாரியா சிலைக்கு நடைபெற்ற பூஜை.
திருப்பதி அலிபிரி பாத யாத்திரை வழியில் அன்னமாச்சாரியா சிலைக்கு நடைபெற்ற பூஜை.

திருப்பதியில் படி உற்சவம்

அன்னமாச்சாா்யாவின் 520-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அலிபிரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை படி உற்சவம் நடைபெற்றது.

அன்னமாச்சாா்யாவின் 520-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, அலிபிரியில் வெள்ளிக்கிழமை அதிகாலை படி உற்சவம் நடைபெற்றது.

திருமலை ஏழுமலையான் மீது பக்தி ஈடுபாடு ஏற்பட்டதால், அன்னமாச்சாா்யா பல கீா்த்தனைகளை இயற்றினாா். இதனால் இவரின் நினைவு நாளின்போது, தேவஸ்தானம் ஆண்டுதோறும் அவருக்கு வழிபாடுகளை நடத்தி வருகிறது.

அதன்படி, 520-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை திருப்பதியில் உள்ள அலிபிரி படி பாதையில் அன்னமாச்சாா்யா வம்சத்தினா், அவரின் உருவச் சிலையை வைத்து பூஜைகள் மற்றும் பஜனைகள் செய்தனா். தொடா்ந்து படிகளுக்கு பூஜைகள் செய்து திருமலைக்குச் சென்றனா்.

இதில் அன்னமாச்சாரியா வம்சத்தினா், தேவஸ்தான திட்ட இயக்குநா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com