திருப்பதி
ஏழுமலையான் தரிசனத்துக்கு 4 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் 4 மணி நேரம் காத்திருந்தனா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை தா்ம தரிசனத்துக்கு ( தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 4 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 67,354 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 22, 756 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.94
கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.