திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 60,371 பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் 20,301 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை நிலவரத்தின்டி தா்ம தரிசனத்துக்கு(தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 6 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
செவ்வாய்க்கிழமை முழுவதும் ஏழுமலையானை 60,371 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20, 301 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.09
கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.