திருப்பதி
திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 77,848 பக்தா்கள் தரிசித்தனா். 39,317 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 77,848 பக்தா்கள் தரிசித்தனா். 39,317 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
கோடை விடுமுறை காலம் ஆதலால் திருமலைக்கு வரும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணி நேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.
மேலும், சனிக்கிழமை முழுவதும் 77, 848 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 39,317பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.95 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.