போளூர் விடோபா மடத்தில் விடோபா சுவாமிகளின்108-ஆவது குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.
போளூரில் ஜமுனாமரத்தூர் சாலை அருகே விடோபா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் விடோபா சுவாமிகளின்
108-ஆவது குருபூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி, விடோபா சுவாமிகளின் சிலைக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை நடைபெற்றன.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட சிவனடியார்கள், சன்னியாசிகளுக்கு உணவு, அங்கவஸ்திரம்
வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.