ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

செல்லியம்மன் கோயிலில் மஹா சண்டி யாகம்

வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் (எ) சப்தமாதர்கள் கோயிலில் மஹா சண்டி யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :27 செப்டம்பர் 2017, 1:09 am IST

வந்தவாசியை அடுத்த கீழ்க்குவளைவேடு கிராமத்தில் அமைந்துள்ள செல்லியம்மன் (எ) சப்தமாதர்கள் கோயிலில் மஹா சண்டி யாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, திங்கள்கிழமை சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கலச ஸ்தாபனம், ஸ்ரீசண்டி பாராயணம், பைரவ பலி பூஜை, யோஹினி பலி பூஜை ஆகியவை நடத்தப்பட்டன.
தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை குழந்தை பாக்கியம், திருமண தடை விலகுதல், சத்ரு ஜெயம் உள்ளிட்டவை வேண்டி மஹா சண்டி யாகம் நடத்தப்பட்டது.
பின்னர், கன்யா பூஜை, வடுக பூஜை, மஹா பூர்ணாஹுதி, அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இதில், கோயில் நிர்வாக அறங்காவலர் சி.பத்ரிநாராயணன், கோயில் ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்த்தி, கோயில் அறங்காவலர் எம்.ஆராவமுதன் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.