தண்டராம்பட்டு அருகே மணல் கடத்திய டிராக்டரை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் புதன்கிழமை அதிகாலை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மணல் எடுத்து வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தினர். அதிகாரிகளைப் பார்த்து ஓட்டுநர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பிச்சென்றார்.
இதையடுத்து, மணலுடன் கூடிய டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானாபுரம் காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









