அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியவர் கைது

வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 

Updated On :9 ஏப்ரல் 2018, 11:47 pm

வந்தவாசி அருகே விவசாயியை தாக்கியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். 
வந்தவாசியை அடுத்த பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. அதே கிராமத்தைச் சேர்ந்த இவரது உறவினர் கோபி (25). இருவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், சனிக்கிழமை ஏழுமலைக்கு சொந்தமான நிலத்தின் வரப்பில் கோபியின் தாய் மல்லிகா மாடுகளை மேய்த்தாராம். இதற்கு ஏழுமலை ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மல்லிகா, கோபி இருவரும் சேர்ந்து ஏழுமலையை தாக்கினராம்.
இதில், காயமடைந்த ஏழுமலை வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் கோபி, மல்லிகா ஆகியோர் மீது வழக்குப் பதிந்த தெள்ளாறு போலீஸார் கோபியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.