மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்ற வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வந்தவாசியில் ஒன்றிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எம்.அர்ச்சனா கலந்து கொண்டு, மூன்றாமிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதையடுத்து, அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அந்த பள்ளித் தலைமை ஆசிரியர்
க.ஜோதிபாபு மாணவி எம்.அர்ச்சனாவுக்கு பரிசு வழங்கி
பாராட்டிப் பேசினார். பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள்
உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






