செங்கத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அமைப்பாளர் ஜம்புகுமார்
ஜெயின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேகர், ஒன்றியத் தலைவர் முரளிதரன், நகர பொதுச் செயலர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டப் பேரவைத் தொகுதி பொறுப்பாளர் கருணாகரன் வரவேற்றார். கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் தடா பெரியசாமி கலந்து கொண்டு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்து பேசினார். இதைத் தொடர்ந்து, சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் ராணுவ கர்னல் பாண்டியன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், தண்டராம்பட்டு ஒன்றியத் தலைவர் வடிவேல், நிர்வாகிகள் விஜயன், தருமன், பழநிவேல், தாமோதரன் உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









