ஆரணி காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் மீது போலீஸில் புகார்

ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் மீது தற்போதைய நகரத் தலைவர் போலீஸில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
Updated on
1 min read


ஆரணியில் காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவர் மீது தற்போதைய நகரத் தலைவர் போலீஸில் வியாழக்கிழமை புகார் அளித்தார்.
ஆரணி நகர காங்கிரஸ் தலைவராக ஜெயவேலை தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நியமனம் செய்து, சுமார் ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில், ஆரணி நகர காங்கிரஸ் தலைவர் ஜெயவேல் நகர காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் ஆரணி நகரத் தலைவராக இருந்த சைதை சம்பந்தம், தன்னை முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நகரத் தலைவராக அறிவித்தார் என்றும், ஆகையால் தான்தான் நகரத் தலைவர் என்றும் கூறி வருகிறார்.
மேலும், காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் நகரத் தலைவர் என பதவி போட்டுக்கொண்டு கலந்து வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரைப் பெற்ற ஆரணி டிஎஸ்பி செந்தில், இது உள் கட்சி விவகாரம் என்றும், நீங்கள் கட்சித் தலைமையிடம் கூறி நடவடிக்கை எடுங்கள் என்றும் கூறி அனுப்பி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com