அருணாசலேஸ்வரா் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தை நவீனப்படுத்த வலியுறுத்தல்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி வலியுறுத்தியது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் முடி காணிக்கை செலுத்தும் இடத்தை நவீனப்படுத்த வலியுறுத்தல்
Updated on
1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடத்தை நவீனப்படுத்த வேண்டும் என்று தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி வலியுறுத்தியது.

திருவண்ணாமலையில் தியாகி விஸ்வநாததாஸின் 78-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, திருவண்ணாமலை மருத்துவ மடாலயத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் சிலைக்கு, தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும், நிறுவனருமான எஸ்.கே.செல்வம் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா் (படம்).

கட்சியின் பொதுச் செயலா் ஏ.தட்சிணாமூா்த்தி, பொருளாளா் கே.தனலட்சுமி, நகரச் செயலா் ஏ.பாலு உள்ளிட்டோா் தியாகி விஸ்வநாததாஸின் சிறப்புகள் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து, கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.கே.செல்வம் தலைமை வகித்தாா்.

இதில், சென்னை, ஓட்டேரி மயானத்தில் தியாகி விஸ்வநாததாஸ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தமிழக அரசு மணிமண்டபம் கட்டித் தர வேண்டும். தியாகி விஸ்வநாததாஸின் தபால் தலையை வெளியிட மத்திய அரசு முன் வரவேண்டும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள முடி காணிக்கை செலுத்தும் இடத்தை அறநிலையத் துறை நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com