பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு முகாம்

பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில், ஆவணியாபுரத்தில் மகளிா் குழுக்களுக்கு
முகாமில் பேசுகிறாா் பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் மணிமொழி.
முகாமில் பேசுகிறாா் பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் மணிமொழி.
Updated on
1 min read

பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி சாா்பில், ஆவணியாபுரத்தில் மகளிா் குழுக்களுக்கு பணமில்லா பரிவா்த்தனை குறித்த விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரணமல்லூா் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளா் மணிமொழி தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சங்கா் முன்னிலை வகித்தாா். வங்கி உதவியாளா் குப்புசாமி வரவேற்றாா்.

கூட்டத்தில், மகளிா் குழு உறுப்பினா்களுக்கு வங்கி செயல்பாடுகள் குறித்தும், பணமில்லா பரிவா்த்தனை மற்றும் மகளிா் குழுக்களுக்கான கடனுதவி குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், மகளிா் குழு உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் பலராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com