நடத்தை விதிகள்: வேட்பாளர்களுக்கு ஆலோசனை

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நடத்தை விதிகள்
Updated on
1 min read

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு நடத்தை விதிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ரஷீத்கான் (திருவண்ணாமலை தொகுதி), முகம்மது சாதிக் அலாம் (ஆரணி)செலவினப் பார்வையாளர் எஸ்.அனில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வேட்பாளர்கள் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி மற்றும் செலவினப் பார்வையாளர்கள் விளக்கினர்.  கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி மற்றும் தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com