பைக் மீது வேன் மோதல்: விவசாயி பலி
By DIN | Published On : 04th August 2019 12:43 AM | Last Updated : 04th August 2019 12:43 AM | அ+அ அ- |

வேட்டவலம் அருகே பைக் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த விவசாயி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
திருவண்ணாமலையை அடுத்த சு.ஆண்டாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு மகன் பச்சையப்பன் (37), விவசாயி.
இவர், வெள்ளிக்கிழமை தனது மனைவி, மகனுடன் பைக்கில் வேட்டவலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
வேட்டவலத்தை அடுத்த வேளானந்தல் பகுதியில் சென்றபோது எதிர் திசையில் இருந்து வந்த வேனும் பைக்கும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த பச்சையப்பன் உள்பட மூவரையும் பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக பச்சையப்பன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.