Enable Javscript for better performance
மக்கள் குறைதீர் கூட்டத்தில்  409 மனுக்கள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மக்கள் குறைதீர் கூட்டத்தில்  409 மனுக்கள்

    By DIN  |   Published On : 27th August 2019 08:05 AM  |   Last Updated : 27th August 2019 08:05 AM  |  அ+அ அ-  |  

    திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 409 மனுக்கள் வரப்பெற்றன.
    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து முதியோர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா,  ஜாதிச் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 409 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
    இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கலசப்பாக்கம்  வட்டம், பத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, வந்தவாசி வட்டம், சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பரிமளா, செய்யாறு வட்டம், வடுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வனிதா ஆகியோர்களுக்கு விதவை உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி வழங்கினார்.
    கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் வில்சன் ராஐசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp