கேரள அரசைக் கண்டித்து பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 09:48 AM | Last Updated : 04th January 2019 09:48 AM | அ+அ அ- |

கேரள அரசைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட பாஜக மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில், திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாஜக மாவட்டத் தலைவர் எஸ்.நேரு தலைமை வகித்தார்.
ஆர்எஸ்எஸ் கோட்டப் பொறுப்பாளர் நீலகண்டன், மாநிலப் பொறுப்பாளர் ராஜசேகர், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ.பி.பாலகிருஷ்ணன், பாஜக மாநில விவசாய அணிச் செயலர் ஏ.ஜி.காந்தி ஆகியோர் சபரிமலையில் பெண்களை அனுமதித்த கேரள அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதில், பாஜக மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலர்கள் பி.கிருஷ்ணமூர்த்தி, எம்.சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்து மக்கள் கட்சி: இதே கோரிக்கையை வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ர.விஜயராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.அசோக்குமார், நகரத் தலைவர் வ.ராஜேஷ் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, செய்யாறில் இந்து முன்னணி சார்பில், கேரள அரசைக் கண்டித்து