ஆரணியை அடுத்த குண்ணத்தூர் பால் கூட்டுறவு சங்கத்தில் போனஸ் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில், தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று குண்ணத்தூர் பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 95 பேருக்கு ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 78 ரூபாய் போனஸ் வழங்கினார்.
இதில், செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்.பி. செஞ்சி வெ.ஏழுமலை, பால் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு வழக்குரைஞர் க.சங்கர், வேலூர் பால் கூட்டுறவு சங்க துணைத் தலைர் பாரி பி.பாபு, பாசறை மாவட்டச் செயலர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராஜி, குண்ணத்தூர் ஊராட்சிச் செயலர் ஆர்.குமார், பால் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் எத்திராஜ், கூட்டுறவு சங்கச் செயலர் ஆர்.பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.