செங்கம் அருகே ரூ.1.92 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 09:16 AM | Last Updated : 30th March 2019 09:16 AM | அ+அ அ- |

செங்கம் அருகே வெள்ளிக்கிழமை உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூ.1.92 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
செங்கத்தை அடுத்த கண்ணக்குருக்கை பகுதியில் செங்கம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சேர்ந்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
காரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த சேட்டு, ரூ.1.92 லட்சத்தை உரிய ஆவணங்களின்றி கொண்டுவந்தது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை செங்கம் வட்டாட்சியர் பார்த்தசாரதி முன்னிலையில், செங்கம் கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...