திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read


வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முனைவர் இரா.வ.கமலக்கண்ணன் தலைமை வகித்தார். ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் வரவேற்றார்.   திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப.குப்பன் திருக்குறளின் மேன்மை குறித்துப் பேசினார்.
மேலும், திருவள்ளுவர் வேடமணிந்து திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு அவர் திருக்குறள் புத்தகங்களை பரிசாக வழங்கினார். 
நிகழ்ச்சியில் திருக்குறள் தொண்டு மைய நிர்வாகிகள் க.பக்தவச்சலம், சுப்பிரமணியம், தலைமை ஆசிரியை கற்பகம், ஆசிரியர் பெ.பார்த்திபன் மற்றும் சீ.கேசவராஜ், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கு.சதானந்தன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com