சேத்துப்பட்டு புனித தோமையர் மருத்துவமனையில் செவிலியர் தின விழா அண்மையில் நடைபெற்றது.
சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள புனித தோமையர் மருத்துவமனையில் செவிலியர் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மருத்துவமனை நிர்வாகி மரியரத்தினம் தலைமை வகித்தார். பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் அமைப்பைச் சேர்ந்த பிரம்ம குமாரி ஸ்வேதா கலந்துகொண்டு செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்து, செவிலியர்களின் சேவை குறித்து எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் புனித தோமையர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர் பயிற்சி நிறுவன முதல்வர், பயிற்றுநர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.