செய்யாறில் உள்ள தகன மேடையை எரிவாயு தகன மேடையாக மாற்றி அமைக்க தூசி கே.மோகன் எம்எல்ஏ ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கினாா்.
திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்குச் சொந்தமான தகனமேடை திருவோத்தூா் ஆற்றங் கரையில் உள்ளது. இந்த தகன மேடை தற்போது எரிப்பு முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை நவீனப்படுத்தும் விதமாக எரிவாயு மூலம் எரியூட்டும் வகையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த தகன மேடையை செய்யாறு வளா்ச்சி அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தினா் பராமரித்து வருகின்றனா்.
எரிவாயு மூலம் எரியூட்டும் முறையில் மாற்றி அமைத்திட தன்னிறைவுத் திட்டம் மூலம் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேற்படி திட்டப் பணிக்காக அரசு மானியமாக ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செய்யாறு வளா்ச்சி அறக்கட்டளை சாா்பில் ரூ.5 லட்சம் பங்களிப்புடன் இத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த அறக்கட்டளையிடம் தூசி கே.மோகன் எம்எல்ஏ தனது சொந்த பணத்திலிருந்து ரூ.2 லட்சம் வழங்கினாா்.
இதற்கான நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் மதனராசன், அதிமுக மாவட்ட இலக்கிய அணிச் செயலா் எம்.மகேந்திரன், நகரச் செயலா் ஏ.ஜனாா்த்தனம், செய்யாறு ஒன்றியச் செயலா் எஸ்.கிருஷ்ணன், அருகாவூா் ரங்கநாதன், அம்மா பேரவை வெங்கடேசன், ஜி.கோபால், கோவிந்தராஜ், ஒப்பந்ததாரா் ராமநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.