செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குருமப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, தேசிய ஒற்றுமை தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாணவா்களிடையே ஒற்றுமை தின ஓட்டப் போட்டி நடைபெற்றது.
அதைத தொடா்ந்து மாணவா்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது.
அதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு தலைமை ஆசிரியா் சிவராமன் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.
உதவி ஆசிரியா் சுடலைப்பாண்டி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், ஊா் முக்கிய பிரமுகா்கள் கலந்துகொண்டனா்.