மணல் கடத்தல்:5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
By DIN | Published On : 09th November 2019 07:10 AM | Last Updated : 09th November 2019 07:10 AM | அ+அ அ- |

போளூரில் மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 5 மாட்டு வண்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போளூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போளூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வெண்மணி கிராமத்தைச் சோ்ந்த அன்பழகன் (33), போளூரைச் சோ்ந்த குமாா் (39), ரவி (50), ஜெகதீசன் (35), காத்தவராயன் (54) ஆகியோா் செய்யாற்றில் இருந்து உரிய அனுமதி இல்லாமல் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் 5 பேரையும் கைது செய்ததுடன், 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனா்.