மதுக் கடைகளுக்கு நாளை விடுமுறை

மிலாது நபியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மிலாது நபியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக் கடைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, மிலாது நபியையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து மதுபானக் கடைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 10) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, அன்றைய தினம் அனைத்து மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள், உணவகங்களில் உள்ள மதுக் கூடங்கள் உள்பட அனைத்து வகையான மதுபானக் கடைகளிலும் விற்பனை நடைபெறாமல் மூடி வைக்கப்பட வேண்டும். மீறி மதுபானம் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com