விசாரணைக் கைதி தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணைக் கைதியை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய விசாரணைக் கைதியை, போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் 17 வயது சிறுவன். நகை பறிப்பு வழக்கில் திருவண்ணாமலை தாலுகா போலீஸாா் அண்மையில் இவரை கைது செய்து கடலூரில் உள்ள சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா். இந்த நிலையில், திருவண்ணாமலையை அடுத்த வெறையூா் காவல் நிலைய போலீஸாா் சிறுவனை மற்றொரு வழக்கு விசாரணைக்காக சில தினங்களுக்கு முன்பு அழைத்து வந்தனா்.

விசாரணை முடிந்து, வியாழக்கிழமை மீண்டும் கடலூருக்கு அழைத்துச் செல்ல 2 காவலா்கள் சிறுவனை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.

பின்னா், பேருந்து நிலையம் எதிரே உள்ள போட்டோ ஸ்டூடியோவில் சிறுவனை போலீஸாா் புகைப்படம் எடுத்தனா். அப்போது, அந்தச் சிறுவன் போலீஸாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றான்.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் என பல்வேறு இடங்களில் தேடியும் அவனைக் காணவில்லை. இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com