மழை வேண்டி நூதன வழிபாடு

கலசப்பாக்கம் அருகே செவ்வாய்க்கிழமை மழை வேண்டி கிராம பெண்கள் சுமார் 500 பேர் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபட்டனர்.
Updated on
1 min read

கலசப்பாக்கம் அருகே செவ்வாய்க்கிழமை மழை வேண்டி கிராம பெண்கள் சுமார் 500 பேர் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபட்டனர்.
கலசப்பாக்கம் வட்டத்தில் பருவமழை அண்மையில் விட்டுவிட்டு பெய்தது. இதனால் கலசப்பாக்கம், மோட்டூர், எலத்தூர், பழங்கோவில், பூண்டி  என கலசப்பாக்கம் தொகுதியில் உள்ள விவசாயிகள் கிணறு மற்றும் மழைநீரைக் கொண்டு சம்பா பயிர் சாகுபடி செய்தனர். 
மேலும், பருவமழை பெய்யாததால் கலசப்பாக்கத்தை அடுத்த மோட்டூர் ஊராட்சியில் போதுமான தண்ணீர் இல்லை. இதனால் அவ்வூரில் உள்ள பெரிய ஏரியில் செவ்வாய்க்கிழமை மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து வருண பகவானை வழிபாடு செய்தனர். இதில் சுமார் 500 பேர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com