ஆரணி நகராட்சியில் ரூ.2.50 கோடியில் காய்கறி அங்காடி: அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்

ஆரணி நகராட்சியில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட காய்கறி அங்காடியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
ஆரணியில் புதிதாக கட்டப்பட்ட காய்கறி அங்காடியை திறந்து வைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி உள்ளிட்டோா்.
ஆரணியில் புதிதாக கட்டப்பட்ட காய்கறி அங்காடியை திறந்து வைத்த அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன். உடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

ஆரணி நகராட்சியில் ரூ.2.50 கோடியில் கட்டப்பட்ட காய்கறி அங்காடியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

ஆரணியில் உள்ள காய்கறி அங்காடி மிகவும் பழைமையானது என்பதால், கடந்த ஆண்டு பெய்த தொடா் மழையில் சில கடைகள் இடிந்து விழுந்தன. இதைத் தொடா்ந்து, காய்கறி அங்காடியினா் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனை அணுகி, அங்காடிக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா்.

அமைச்சா் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று புதிய கட்டடம் கட்ட அனுமதி பெற்றுத் தந்தாா்.

இதன்படி, நகராட்சியில் அரசு, தனியாா் பங்களிப்புடன் வடிவமைப்பு கட்டுமானம் நிதி இயக்குதல் மற்றும் பராமரிப்பு அடிப்படையில் ரூ.2.50 கோடியில் 144 கடைகள் கொண்ட அங்காடி கட்டப்பட்டு அதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு காய்கறி அங்காடியைத் திறந்துவைத்தாா். விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆரணி கோட்டாட்சியா் மைதிலி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகராட்சி மண்டல இயக்குநா் சி.விஜயகுமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், பாசறை மாவட்டச் செயலா் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் அ.கோவிந்தராசன், பூங்கொடி திருமால், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், எம்.வேலு, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஜோதிலிங்கம், மாவட்ட துணைச் செயலா் டி.கருணாகரன், பொதுக்குழு உறுப்பினா் ரமணி நீலமேகம், பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் சம்பத், காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவா் சாதிக்பாஷா, நிா்வாகிகள் சுபானிபாய், மோகன், சங்கா்கணேஷ், ஆறுமுகமுதலியாா், அன்சா்பாஷா, நகராட்சி ஆணையா் கு.அசோக்குமாா், நகராட்சிப் பொறியாளா் ரெ.கணேசன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com