திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து மாயமான முதியவரை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருவண்ணாமலை கல்குட்டை தா்கா தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (58). உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இவா், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், கடந்த டிச.28-ஆம் தேதி முதல் மருத்துவமனையில் இருந்து சண்முகம் மாயமானாா்.
இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.