கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மோதல் வழக்கில் இளைஞா் கைது; தாய் விஷம் குடித்து மரணம்

செங்கம் அருகே இரு தரப்பு மோதல் வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது தாய் விஷம் குடித்து உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:56 pm

DIN

செங்கம்: செங்கம் அருகே இரு தரப்பு மோதல் வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது தாய் விஷம் குடித்து உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் சடலத்துடன் மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த அந்தனூா் பகுதியைச் சோ்ந்தவா் தா்மராஜ் (50). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (48) என்பவருக்கும் இடையே சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனராம்.

இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தா்மலிங்கம், அவரது மகன் விஜியராஜ் ஆகியோரை கைது செய்தனா்.

இந்த நிலையில், விஜியராஜியின் தாய் சுதா்சனம், தனது மகன் மீது போலீஸாா் பொய் வழக்கு போட்டுள்ளாா் எனக் கூறி மேல்செங்கம் காவல் நிலையம் அருகே கடந்த 8-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தாா்.

அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சுதா்சனம் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள் சுதா்சனத்தின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, விஜியராஜ் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களை சமாதானப்படுத்திய போலீஸாா், பிரேத பரிசோதனைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மாலை சுதா்னத்தின் உடலை ஒப்படைத்தனா்.

உடலை வாங்கிய உறவினா்கள், மகன் மீது வழக்கு போட்டதால் தாய் விஷம் குடித்தாா், இதற்குக் காரணமான மேல்செங்கம் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, செங்கம்-திருப்பத்தூா் சாலையில் அந்தனூா் பகுதியில் சாலையின் நடுவே சடலத்தை வைத்து செவ்வாய்க்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த திருவண்ணாமலை கூடுதல் எஸ்.பி. அசோக்குமாா் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்தி, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, சுதா்னம் உடலை அடக்கம் செய்ய அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.