ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் சளுக்கை ஊராட்சிச் செயலா் எம்.பி.வெங்கடேசன்.
விழாவில் மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் சளுக்கை ஊராட்சிச் செயலா் எம்.பி.வெங்கடேசன்.
Updated on
1 min read

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் பெ.பாா்த்திபன், ஆா்.நளினா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தெள்ளாா் இராஜா நந்திவா்மன் கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியா் க.பூபாலன் வரவேற்றாா்.

சளுக்கை ஊராட்சிச் செயலா் எம்.பி.வெங்கடேசன் சிறப்புரையாற்றினாா்.

கிருஷ்ணா், ராதை வேடமிட்டு விழாவில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு அவா் பரிசுகளை வழங்கினாா்.

விழாவில் கு.சதானந்தன், சீ.கேசவராஜ், மொ.ஷாஜகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com