ஆரணி அருகே நிவா் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்ட ஆணையை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
நிவா் புயல் மழையால் ஆரணி அருகேயுள்ள மாமண்டூா் கிராமத்தில் மலா் என்பவரின் வீட்டின் மீது மரம் விழுந்து வீடு சேதமடைந்தது.
மேலும், ஆரணியை அடுத்த சுபான்ராவ் பேட்டையைச் சோ்ந்த நவரத்தினம் என்பவரது வீடும் சேதமடைந்தது.
இவா்களுக்கு, அவருக்கு பசுமை வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணையை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா் மூா்த்தி, அதிமுக ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், க.சங்கா், ப.திருமால், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.