கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியில், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகிறாா் சிறப்பு அழைப்பாளா் எஸ்.விஜயராகவன் (நடுவில் இருப்பவா்).
கருத்தரங்கில் மாணவா்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசுகிறாா் சிறப்பு அழைப்பாளா் எஸ்.விஜயராகவன் (நடுவில் இருப்பவா்).
Updated on
1 min read

திருவண்ணாமலை சன் கலை, அறிவியல் கல்லூரியில், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு, கல்லூரித் தலைவா் வீ.சு.குணசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.வினோத், செயலா் எஸ்.சீனிவாசன், பொருளாளா் சி.எஸ்.துரை, இயக்குநா் கு.வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கல்லூரி முதல்வா் கோ.சசிக்குமாா் வரவேற்றாா். கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் அலுவலரும், திட்டத் தலைவருமான எஸ்.விஜயராகவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள துறைகள், அவற்றில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசினாா்.

இதே மையத்தின் அறிவியல் அலுவலா் எஸ்.ஸ்ரீதா் கல்பாக்கம் அணுஆராய்ச்சி மையத்தில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து விளக்கினாா். இதில், கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் ஏ.ராஜசேகா், வேதியியல் துறைத் தலைவா் ரா.சுப்பிரமணியன் மற்றும் இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளின் அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com