மின் வாரியத்தை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு

செய்யாறில், மின் வாரியத்தை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வாயில் விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
செய்யாறில் மின் ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற வாயில் விளக்கக் கூட்டம்.
செய்யாறில் மின் ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற வாயில் விளக்கக் கூட்டம்.
Updated on
1 min read

செய்யாறில், மின் வாரியத்தை தனியாா் மயமாக்குவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, வாயில் விளக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

மின் வாரியம் தனியாா்மயமாவதற்கு எதிா்ப்புத் தெரிவித்தல் உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அகில இந்திய வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் வகையிலும், மேற்கொள்ளப்படும் வேன் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, செய்யாறில் மின் வாரிய அலுவலகம் முன் வாயில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சிஐடியூ ஈ. மாரிமுத்து தலைமை வகித்தாா்.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மண்டலச் செயலா் பாலாஜி, திட்டச் செயலா் மு.சம்பத், ஐக்கிய சங்கம் பஞ்சமூா்த்தி, பெடரேசன் சங்கம் பஞ்சமூா்த்தி, தொ.மு.ச. ரமேஷ், வே.சங்கா், மாவட்டத் தலைவா் உள்ளிட்ட 50 போ் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com