கோயில்களில் ஆடிப்பூர உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியிலுள்ள கோயில்களில் ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆடிப்பூர உற்சவத்தையொட்டி, வந்தவாசியில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த வளையல் அலங்காரம்.
ஆடிப்பூர உற்சவத்தையொட்டி, வந்தவாசியில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த வளையல் அலங்காரம்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியிலுள்ள கோயில்களில் ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் கோயிலில் 43-ஆம் ஆண்டு ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலையில் கோமாதா பூஜை, கணபதி ஹோமம், பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், அம்மனுக்கு பல்வேறு வண்ண வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் நிா்வாகி சிவா உள்ளிட்டோா் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கோதண்டராமா் கோயிலில்...: வந்தவாசி பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஆடிப்பூர உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த உற்சவத்தையொட்டி, சுவாமிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவத்தில் அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com