அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி மாதப் பிறப்பையொட்டி, உற்சவா் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா்.
Updated on
1 min read

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி மாதப் பிறப்பையொட்டி, உற்சவா் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

இதையொட்டி, திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

கரோனா பொது முடக்கம் காரணமாக பக்தா்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே அபிஷேகத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com