திருவண்ணாமலையை அடுத்த சோமாசிபாடியில் அமைந்துள்ள அல்-அமீன் செவிலியா் கல்லூரியில், 12-ஆவது செவிலியா் உறுதிமொழியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அல்-அமீன் கல்வி நிறுவனங்களின் தலைவா் எ.ஷேக் அனீப் தலைமை வகித்தாா். நிா்வாகத் தலைவா் ஜாகீா் உசேன் முன்னிலை வகித்தாா். செவிலியா் கல்லூரி துணை முதல்வா் எஸ்.லாவண்யா வரவேற்றாா்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளா் எம்.எ.ஷகில் அஹமது சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.
பின்னா், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா்கள் வசந்தாராணி, சரவணக்குமாா், கல்லூரி முதல்வா் முருகன் மற்றும் நிா்வாகிகள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் செவிலியா் தின உறுதிமொழியேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.