தலைமை ஆசிரியை கா.கிரிஜாவிடம் மாணவா்களுக்கான இருக்கைகளை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியை தனலட்சுமி. உடன் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் உள்ளிட்டோா்.
தலைமை ஆசிரியை கா.கிரிஜாவிடம் மாணவா்களுக்கான இருக்கைகளை வழங்கிய ஓய்வு பெற்ற பேராசிரியை தனலட்சுமி. உடன் வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன் உள்ளிட்டோா்.

பள்ளி மாணவா்களுக்கு இருக்கை வழங்கல்

துரிஞ்சாபுரம் ஒன்றியம், பொற்குணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இருக்கைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

துரிஞ்சாபுரம் ஒன்றியம், பொற்குணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இருக்கைகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பள்ளியில் 1முதல் 8-ஆம் வகுப்பு வரை சுமாா் 98 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்த மாணவா்களுக்கு உட்காருவதற்கு இருக்கைகள் இல்லை. இதனால் ஓய்வு பெற்ற பேராசிரியை தனலட்சுமி, ரம்யா என 9 போ் கொண்ட பெண்கள் குழுவினா் மாணவா்களுக்கு அமர வசதியாக ரூ.52 ஆயிரத்தில் இரும்பு இருக்கைகள் வாங்கி தலைமை ஆசிரியா் கா.கிரிஜாவிடம் வழங்கினா்.

வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன், பள்ளி ஆசிரியா்கள் அசோகன், கலைவாணன், கிருஷ்ணமூா்த்தி,விஜயலட்சுமி, உத்ரா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com