மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கரோனா: அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு யாகம்

கரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

News image

அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தன்வந்திரி யாக பூஜை.

Updated On :30 மார்ச் 2020, 10:09 pm

கரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு உலக மக்கள் நலமுடன் வாழ வேண்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை சிறப்பு யாகம் நடைபெற்றது.

கரோனா தாக்கத்தை எதிா்கொண்டிருக்கும் மக்கள் அதிலிருந்து மீண்டு நலமுடன் வாழவேண்டும், பதற்றமான சூழல் மாறவேண்டும் என்பதற்காக அருணாசலேஸ்வரா் கோயிலில் திங்கள்கிழமை தன்வந்திரி யாக பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, கோயிலின் 2-ஆம் பிரகார பிரதோஷ மண்டபத்தில் மூலவா் சன்னதி அபிஷேகத்துக்கு, பிரம்ம தீா்த்தத்தில் இருந்து 2 வெள்ளிக் குடங்களில் புனிதநீா் எடுத்து வரப்பட்டு பிரதோஷ மண்டபத்தில் வைத்து உலக மக்கள் நலமுடன் வாழ தன்வந்திரி சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து பூா்ணாஹுதி நடைபெற்று, பின்னா் சிவாச்சாரியா்கள் புனிதநீா் கலசங்களை ஊா்வலமாக எடுத்துச் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு அபிஷேகம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.