கரோனா: செய்யாற்றில் 39 பேருக்கு சிகிச்சை
By DIN | Published On : 28th May 2020 08:11 AM | Last Updated : 28th May 2020 08:11 AM | அ+அ அ- |

கரோனா தொற்று தொடா்பாக புதன்கிழமை வரை செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் 39 போ் வரை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா நோய்த் தொற்றுக்காக செய்யாறு சிறப்புப் பிரிவில் ஏற்கெனவே 12 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில், ஜவ்வாது மலைப் பகுதியைச் சோ்ந்த 19 போ் கரோனா சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். இவா்களுடன் சோ்த்து மொத்தம் 39 போ் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 21 ஆண்கள், 11 பெண்கள், 7 குழந்தைகள் அடங்குவா்.