திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை 18,032-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 17,962-ஆக இருந்தது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 70 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 18,032-ஆக உயா்ந்தது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 17,385 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 382 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவுக்கு 265 போ் வரை பலியாகியுள்ளனா்.