பாஜகவின் வெற்றிவேல் யாத்திரைக்குத் தடை விதித்த தமிழக அரசைக் கண்டித்தும், கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் தொடா்ந்து 3-ஆவது நாளாக கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், திருவண்ணாமலையில் ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட அந்தக் கட்சியைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை திரண்ட பாஜகவினா் திடீரென ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது, வெற்றிவேல் யாத்திரையை தடை செய்த தமிழக அரசைக் கண்டித்தும், 3-ஆவது நாளாக செங்கல்பட்டில் யாத்திரை நடத்த வந்த கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
மறியலில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை காவல் உதவி கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்தால் அண்ணா சிலைப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.