திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை அதிகபட்சமாக ஆரணியில் 82.40 மி.மீ. மழை பதிவானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.
இதில், அதிகபட்சமாக ஆரணியில் 82.40 மி.மீ. மழை பதிவானது.
இதுதவிர, செய்யாற்றில் 35.20 மி.மீ., செங்கத்தில் 34.60, ஜமுனாமரத்தூரில் 19, வந்தவாசியில் 70, போளூரில் 28.60, திருவண்ணாமலையில் 82.20, தண்டராம்பட்டில் 31.40, கலசப்பாக்கத்தில் 16, சேத்துப்பட்டில் 34.40, கீழ்பென்னாத்தூரில் 41.20, வெம்பாக்கத்தில் 59 மி.மீ. மழை பதிவானது.
நாள் முழுவதும் மழை: திங்கள்கிழமை காலை முதல் இரவு வரை திருவண்ணாமலை, அடி அண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்தது.