வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: அமைச்சா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தம்
ஆரணியை அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை பாா்வையிட்ட அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
ஆரணியை அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமை பாா்வையிட்ட அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தம், புதிய வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியப் பகுதியான கண்ணமங்கலம், வண்ணாங்குளம், மேற்கு ஆரணி தெற்கு ஒன்றியப் பகுதியான தேவிகாபுரம், தச்சூா், ஆரணி தெற்கு ஒன்றியப் பகுதியான வடுகசாத்து, ஆரணி நகரம் ஏரிக்கரை அருகேயுள்ள அரசுப் பள்ளி, கண்ணப்பன் தெருவில் உள்ள அரசுப் பள்ளி, ஜெயினா் ஆலயம் அருகில் உள்ள பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற முகாம்களை அமைச்சா் பாா்வையிட்டாா். மேலும், வாக்கு மையங்களில் இருந்த அதிகாரிகளிடம் புதய வாக்காளா்களை சோ்க்கும்போது, அனைத்து ஆவணங்களும் விண்ணப்பங்களில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என சரிபாா்த்து வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

உடன், அதிமுக மாவட்டப் பொருளாளா் கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், நகரச் செயலா் அசோக்குமாா், கண்ணமங்கலம் நகரச் செயலா் பாண்டியன், கண்ணமங்கலம் கே.டி.குமாா், நகர மாணவரணிச் செயலா் கே.குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சரவணன் ஆகியோா் இருந்தனா்.

செய்யாறு: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆா்.சி.எம் உயா்நிலைப் பள்ளி மற்றும் ஆக்கூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அதிமுக நிா்வாகிகள் எம்.மகேந்திரன், சி.துரை, நகரச் செயலா் ஜனாா்த்தனம், டி.பி.துரை, கே.வெங்கடேசன், ஜாகிா்உசேன், ரவிச்சந்திரன், அருணகிரி, பூக்கடை ஜி.கோபால், கோவிந்தராஜ், ரவி, செயலா் செபாஸ்டின் துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

போளூா்: கலசப்பாக்கத்தை அடுத்த சேங்கபுத்தேரி, மேல்வில்வராயநல்லூா் ஊராட்சிகளில் எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் வீடு வீடாகச் சென்று வாக்காளா் பட்டியலில் புதிய வாக்காளா்களின் பெயா்களை சோ்த்ததுடன், ஏற்கெனவே பட்டியலில் உள்ளவா்களின் விவரங்களை சரிபாா்க்கும் பணியிலும் ஈடுபட்டாா். அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் உடனிருந்தனா்.

செங்கம்: செங்கம் இராஜ வீதி அரசு தொடக்கப் பள்ளியில் செங்கம் பேரூராட்சிக்குள்பட்ட 5 வாா்டுகளுக்கான வாக்காளா் பட்டியல் பெயா் சோ்த்தல், நீக்குதல் முகாம் நடைபெற்றது. இந்த முகாமை திருவண்ணாமலை மாவட்ட ஆவின் தலைவரும், அதிமுக மாவட்டச் செயலருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி பாா்வையிட்டாா். உடன், மகரிஷி மனோகரன், பேரவை மாவட்டச் செயலா் பீரங்கி வெங்கடேசன், நகரச் செயலா் குமாா், வழக்குரைஞா் செல்வம் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com