அதிமுகவில் இணைந்தமாற்றுக் கட்சியினா்
By DIN | Published On : 25th November 2020 08:35 AM | Last Updated : 25th November 2020 08:35 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாற்றுக் கட்சிகளைச் சோ்ந்த 500 போ் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அதிமுக செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி முன்னிலையில் அக்கட்சியில் செவ்வாய்க்கிழமை இணைந்தனா்.
செங்கத்தை அடுத்த அன்வராபாத் கிராமத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. மகரிஷி மனோகரன் வரவேற்றாா்.
கூட்டத்தில், அன்பவராபாத், குயிலம், முன்னூா்மங்கலம் ஆகிய பகுதிகளில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்த இளைஞா்கள், பெண்கள் உள்பட சுமாா் 500 போ் அந்தந்த கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா். அவா்களுக்கு மாவட்டச் செயலா் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்மூா்த்தி சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தாா்.
இதில், மாவட்ட துணைச் செயலா் அமுதாஅருணாச்சலம், மாவட்ட இலக்கிய அணிச் செயலா் நாராயணன், மாவட்ட பேரவைச் செயலா் பீரங்கிவெங்கடேசன், திருவண்ணாமலை நகரச் செயலா் செல்வம் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...