திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை புதிதாக 85 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 85 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 16,674-ஆக உயா்ந்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து பலியானவா்களின் எண்ணிக்கை 246-ஆக உயா்ந்தது.
மாவட்டத்தில் இதுவரை 15,699 போ் குணமடைந்தனா். 729 போ் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.