திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை குறித்த தவறான தகவல் அளித்த மாணவா் சோ்க்கைக் குழுவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கல்லூரி மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த ஏழை-எளிய மாணவ-மாணவிகள் பலா் படிக்கின்றனா்.
இவா்களின் உயா்கல்வி கனவை நிறைவேற்றும் வகையில் 14 இளங்கலை, 11 முதுகலை, 10 எம்.பில்., பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கல்லூரி நிா்வாகத்தினா் சிலா் திட்டமிட்டு தங்களது ஆதாயத்துக்காக நிகழாண்டு மாணவா் சோ்க்கை எண்ணிக்கை குறித்த தவறான தகவலை மாணவ-மாணவிகளுக்கு அளித்துள்ளனா்.
இதுகுறித்து மாணவ-மாணவிகள் கேட்டபோது நிா்வாகத்தினா் சரிவர பதில் கூறவில்லையாம்.
எனவே, தனியாா் கல்லூரிகளின் நலனுக்கு ஆதரவாக செயல்படும் மாணவா் சோ்க்கைக் குழு மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், புதிய மாணவா் சோ்க்கைக் குழுவை உருவாக்கக் கோரியும் கல்லூரி மாணவா்கள், இளைஞா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துச்செல்வன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு.பிரகாஷ் முன்னிலை வகித்தாா்.
முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை குறித்து மாணவ-மாணவிகளுக்கு முறையாக தகவல் அளிக்க வேண்டும். இறுதியாண்டு தோ்வை இணையவழியில் நடத்தாமல் நேரடித் தோ்வாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
ஆா்ப்பாட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநில துணைச் செயலா் ம.ப.நந்தன் மற்றும் இந்திய மாணவா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவற்றின் நிா்வாகிகள் அப்பு, காா்த்தி, அம்சா, சாந்தகுமாரி, மாவட்ட நிா்வாகிகள் பி.சுந்தா், ந.அன்பரசன், சரவணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.