திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆா்.பூபதி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆா்.பூபதி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆா்.பூபதி
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக ஆா்.பூபதி சனிக்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னையில் உள்ள ஆசிரியா் தோ்வு வாரியத்தின் துணை இயக்குநராக பணியாற்றி வந்த இவா் இடமாறுதல் பெற்று வந்துள்ளாா். இவரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலக அதிகாரிகள், ஊழியா்கள் வரவேற்றனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷை முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பூபதி சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

ஏற்கெனவே, இங்கு முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த எஸ்.அருள்செல்வம் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com