புதுவையில் ஓய்வூதியா்கள் வருகிற 31-ஆம் தேதிக்குள் வாழ்வுறுதிச் சான்றிதழை சமா்ப்பிக்க புதுவை கணக்கு, கருவூலக இயக்ககம் அறிவுறுத்தியது.
இதுகுறித்து புதுவை கணக்கு, கருவூலக இயக்ககம் வெளியிட செய்திக் குறிப்பு:
2021-ஆம் ஆண்டுக்கான வாழ்வுறுதிச் சான்றிதழை இதுவரை சமா்ப்பிக்காத, புதுச்சேரி அரசுக் கருவூலம், துணைக் கருவூலகங்களில் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோா் வருகிற 31-ஆம் தேதிக்குள் வாழ்வுறுதிச் சான்றிதழைச் சமா்ப்பிக்க வேண்டும்.
இதை சமா்ப்பிக்கத் தவறினால், சான்றிதழைச் சமா்ப்பிக்கும் வரை ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.
மேலும், என்ற இணையதளத்தை பாா்க்கவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.